About Me

My photo
Chennai, India
Simple...

Sunday, May 30, 2010

திருமலை திருப்பதி - கலியுக தெய்வம்





அனுபல்லவி [சிவ ரஞ்சினி]

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் - 1 [சிவ ரஞ்சினி]

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் -2 [காபி]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

சரணம் - 3 [காபி]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் - 4 [சிந்து பைரவி]


கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

சரணம் - 5 [சிந்து பைரவி]

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

பாடலை எழுதியவர்: மூதறிஞர் இராஜாஜி
பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி

வினை தீர்க்கும் விநாயகர்
























அருணகிரிநாதர் அருளிய முருகன் பாடல்கள்




































Saturday, May 29, 2010

அபிராமி அந்தாதி





அபிராமி அந்தாதி


தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே

எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.



அபிராமி பதிகம்


பதினாறு பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!

--அபிராமி பட்டர்.

அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியைத் தவிர, அபிராமி அம்பிகை மீது இரு பதிகங்கள் பாடியுள்ளார். இரண்டாவது பதிகத்தின் நிறைவுப் பாடலான மேற்கண்ட பாடலில் மக்கள் விரும்பும் பதினாறு வகைப் பேறுகளைப் பட்டியலிடுகிறார்.

தமக்கென்று கேளாமல் சத்தியமாய்த் துதிப்போருக்குப் பதினாறு பேறுகளை இப்பூவுலகில் அளிக்க அவர் விண்ணப்பிப்பது குறிப் பிடத்தக்கது.


நோயற்ற வாழ்வு இருந்தால் மட்டுமே பிற பேறுகளை அனுபவிக்க இயலும். ஆகவே நோயின்மையை முதலில் குறிப்பிட்டார்.


பொருளீட்டவும், அதனைக் காக்கவும் கல்வியறிவு தேவை.

அடுத்த இன்றியமையாத தேவை உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள் உணவுக்கு மூலாதாரம்.

தானியம் வாங்கப் பணம் வேண்டும். ஆகவே தனம் வேண்டினார். பொன், பொருள், பிற செல்வங்கள் இப்பேற்றினில் அடங்கும்.

முதலில் நான்கு விதமான அடிப்படைத் தேவைகளைக் கேட்ட பிறகு மற்றப் பேறுகளைக் கேட்கிறார். இயற்கை-செயற்கை அழகு, அக- புற அழகு போன்றவை நமக்குச் சிறப்பு சேர்ப்பவை.

உயிரைக் கொடுத்தும் மக்கள் புகழடைய விரும்புகிறார்கள். 'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' என்று கம்பர் பாடுகிறார். 'Seeking the buble reputation even in the cannon's mouth' ( பீரங்கி வாயிலும் நீர்க்குமிழி போன்ற புகழ் பெற விரும்புவர்) என்கிறார் ஷேக்ஸ்பியர்.

நற்குடியில் பிறந்ததாலும், கல்வியாலும், சமுதாயத்தில் பெற்ற அந்தஸ்தாலும் பெருமை கொள்ளலாம். ஆனால் அவற்றால் ஆணவம் கூடாது.


பல்லாண்டு நீடித்த இளமையுடன் இருத்தல் ஒரு பேறு. உடலாலும், மனத்தாலும் இளமையுடன் இருத்தல் சிலருக்கே வாய்க்கும்.

மனதைத் தன் வழியில் செல்லவிடாமல் நற்செயல்களில் செலுத்துவதே அறிவு என்பார் வள்ளுவர். அதுவே ஒரு பேறாகும்.

நன்மக்களைப் பெறுதல் மிகச் சிறந்த பேறு

உடல் மற்றும் உள்ளத்து வலிமையை இங்கு 'வலி' என்று குறிப்பிடுகிறார் பட்டர்.

அடுத்ததாகத் துணிவு ஒரு பேறாகும்.

மன்னன் விக்கிரமாதித்தனிடம் எட்டு லட்சுமிகளும் வாசம் செய்தனர். ஒரு நாள் அவர்கள் அவனை விட்டு நீங்குவதாகக் கூறினார்கள். அவன் பெரிதும் விரும்பும் ஒரு லட்சுமி மட்டும் நிலைத்திருக்கத் தயார் எனவும் கூறினார்கள். விக்கிரமாதித்தன் தைர்ய லட்சுமியே தன்னுடன் தங்க வேண்டும் என்றான். அவனது பதிலால் மகிழ்ந்து அஷ்டலட்சுமிகளும் நிலைத்து வாழ்ந்தனர் என்பர். இதனால் துணிவின் சிறப்பு தெளிவாகிறது.


வாழ்நாள் என்பது நீண்ட ஆயுளைக் குறிக்கும் என்றும் பதினாறு என்ற ஆயுளை மார்க்கண்டேயருக்குச் சிவபெருமான் அளித்ததுபோல் நமக்கும் அபிராமி அம்மை நீண்ட ஆயுளை அருள வேண்டும்.

எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி எய்துவதும் ஒரு பேறு.அதனையும் அன்னை அபிராமி அருள்வாள்.

வள்ளுவர் ஊழினை, ஆகூழ், போகூழ் என இருவகைப்படுத்தினார். ஒருவனுக்கு ஆகூழால் சுறுசுறுப்பும், போகூழால் சோம்பலும் தோன்றும் என்கிறார். ஆகவே அபிராமி பட்டரும் ஆகு நல்லூழ் வேண்டும் என்கிறார்.

மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் அனுபவிக்கும் வாய்ப்பை நுகர்ச்சி என்பர். வள்ளுவரும் 'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது' என்கிறார். அத்தகைய துய்க்கும் நுகர்ச்சியை அபிராமியே நல்குவாள். அவற்றை அருளும் அபிராமியின் சிறப்புகளை பாடலின் நி¨றைவுப் பகுதியில் உறைக்கிறார். அவள் நற்குணங்கள் உடையவள், உலகைப் பரிபாலிப்பவள். பக்தர்களுக்கு அனுகூலம் செய்பவள். முத்தலைச் சூலம் தாங்கியவள். மங்களம் நிறைந்தவள். மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்பவள். அழகானவள். நல்ல ஆக்ஞா சக்கரம் உடையவள். அதாவது நல்லாட்சி புரிபவள். புகழ் பெற்றவள். சிவ னுக்கு மகிழ்ச்சி அளிப்பவள் சிவனின் வாம (இடப்) பாகத்தில் இருப்பதால் வாமி எனப்படுபவள்.

நாமும் நாளும் இப்பாடலைப் பாராயணம் செய்து பதினாறு பேறுகளும் பெறுவோமாக.

நன்றி; ராமகிருஷ்ன விஜயம்

பகவத் கீதா கடமை மூலம் கடவுள்




Read பகவத் கீதா கடமை மூலம் கடவுள் from the following Link

http://www.sriramakrishnamath.org/download/gita4.pdf

அன்பே சிவம்...Om Namasivaya





தேவாரங்கள்


மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே




காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே


திருவாசகம்


பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது நீயே.


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
ஏங்கெழுந் தருளுவ தினியே

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே


சிவபுராணம்


நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி

பல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
சொல்லா நின்றவித் தாவர சங்கமத்துள்


திருப்புகழ்

ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே



வாழ்க வளமுடன்

வள்ளலார் பாடல்கள்

தெய்வத் தனித் திருமாலை

கலைநிறை கணபதி சரணஞ் சரணம்

கஜமுக குணபதி சரணஞ் சரணம்

தலைவநின் இணையடி சரணஞ் சரணம்

சரவண பவகுக சரணஞ் சரணம்

சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்

சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்

உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்

உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்






நமச்சிவாயப் பதிகம்

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்

பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்

உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்

உயிரை மேவிய உடல்மறந் தாலும்

கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்

கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்

நமச்சி வாயத்தை நான்மற வேனே







தெய்வமணி மாலை

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்

பிடியா திருக்கவேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே

Thursday, May 27, 2010

Friday, May 7, 2010

Dates Tree.....







The earilier stage of dates are shown in pictures. These are taken at near to our villa.



06-May-10



Tuesday, May 4, 2010

Site Visit 03-May-10


This photo was captured during my asset verification